இரவில் ஊரடங்கை அமுல்படுத்துவதற்கான காரணம்

ajith nivard cabraal
ajith nivard cabraal

இலங்கையில் இரவு நேரங்களில் களியாட்ட நிகழ்வுகளை நடத்துவதன் காரணமாகவே இரவில் மாத்திரம் ஊரடங்கை அமுல்படுத்த தீர்மானித்ததாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று (16) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், இதுகுறித்து ஊடகமொன்றுக்கு தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.