யானை மீது துப்பாக்கிச் சூடு; விசாரணைகள் ஆரம்பம்

gun
gun

யால தேசிய  சரணாலயத்தின், 3ஆம் வலயத்தில், யானை ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி, அதன் தந்தங்களும், வாலும் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும், காவல்துறையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செல்லக்கதிர்காமம் – கோத்தமிகம பகுதியில் நேற்று முன்தினம், அடையாளம் தெரியாதவர்களினால், குறித்த யானை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.