முக்கிய அரசியல்வாதிகளுக்கென தயார் செய்யப்பட்டுள்ள சிறை

prison
prison

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்படும் பட்சத்தில் தடுத்து வைப்பதற்கு வசதியாக கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள ஒரு அறை தயாராக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அந்த அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அத்துடன் கடந்த அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்‌ஷவின் சகாக்களும் இந்த அறையிலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கல்களை நிகழ்கால அரசும் மேற்கொண்டு வருவதாக சுமனரத்ன தேரர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவரிக் கருத்திற்கேற்ப அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.