கொரோனாவிலிருந்து மேலும் 2,283 பேர் குணமடைவு

thumb large recover
thumb large recover

நாட்டில் இன்று 2,283 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 314, 340 ஆக அதிகரித்துள்ளது.