வவுனியா வைத்தியசாலையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

IMG 2690 1 1
IMG 2690 1 1

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும் நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 6 பேர் மரணித்துள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி க.ராகுலன் தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரகாலத்தில் நோய் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்றாளர்கள் 184 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 50 இற்கும் மேற்பட்டோர் ஒட்சிசன் தேவையுடையவர்களாகவும் 8 பேர் அதி தீவிரசிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 6 பேர் சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளனர்.

தற்போது 70 இற்கும் மேலான கொரோனா நோயாளிகள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எனவே மக்கள் தம்மை தாமே பாதுகாத்து கொள்ளும் பொறிமுறையை கைக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.