புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று, அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஆறு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அமைச்சுக்கு வருகைதருவதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கப்பட்ட தலைமைத்துவத்திற்காக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, அவர் பாராட்டியுள்ளார்.
அதேவேளை, வெளிவிவகார அமைச்சின் அனைத்து நடவடிக்கைகளிலும், அமைச்சர் தினேஷ் குணவர்தன இலங்கையின் உள்ளார்ந்த சுயமரியாதை மற்றும் கௌரவம் பாதிக்கப்படாது இருப்பதனை உறுதிப்படுத்தியதாகவும், புதிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.