சிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்று தீவிரம்!

gallerye 174729294 2529766
gallerye 174729294 2529766

சிறுவர்கள் மத்தியில் கொரோனாத் தொற்றுப் பரவல் மேலும் அதிகரித்துள்ளது என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜே.விஜேசூரிய தெரிவித்தார்.

கொரோனாத் தொற்று காரணமாக நாளாந்தம் சுமார் 25 சிறுவர்கள் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சேர்க்கப்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

“பெற்றோர் கொரோனாத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டாலும் கூட, தமது குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் கடைப்பிடிக்க வேண்டும்” என்றார்.