வவுனியாவில் மயங்கி விழுந்து மரணித்த பெண்ணுக்கு கொரோனா!

dea1
dea1

வவுனியா, குருமன்காடு பகுதியில் திடீரென மயங்கி விழுந்த இளம் குடும்ப பெண் மரணமடைந்துள்ளார். இன்று இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, குருமன்காடு பகுதியில் வசித்து வந்த இளம் குடும்ப பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக அப்பெண்ணை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், குறித்த பெண்  சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு மரணமடைந்தவராவார். குறித்த பெண்ணிற்கு கொவிட் தொற்று உள்ளதா என அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில் குறித்த பெண்ணுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.