முத்துக்களுடன் 7 பேர் கைது

kaithu
kaithu

கம்பளை காவல்துறை பிரிவில் பொரலுமங்கட பிரதேசத்தில் வேன் ஒன்றில் பயணித்த 7 பேரை சோதனைக்குட்படுத்திய போது அவர்களிடமிருந்து 3 முத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு முத்துக்களை தம்வசம் வைத்திருந்த 23 – 46 வயதுக்கு இடைப்பட்ட 7 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை காவல்துறையினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்