மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் நால்வர் காயம்!

b8a2a2f8 3d88 4c66 9015 e4b658439515
b8a2a2f8 3d88 4c66 9015 e4b658439515

வவுனியா கனகராயன்குளம் காவற்துறை பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் மரம் முறிந்து வீட்டின் மீது வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (21) மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், பெரியகுளம் பகுதியில் மாலை இலேசான மழை பொழிந்த நிலையில் வீட்டின் அருகில் நின்றிருந்த பாலைமரம் முறிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

f94b9d7b adf6 41f8 beb0 65e68d422c89

இதன்போது வீட்டில் இருந்த இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்களின் தாயார் சிறுகாயங்களிற்குள்ளாகியுள்ளார்.
வவுனியா கனகராயன்குளம் உட்பட அதனை அண்டிய பகுதிகளில் இன்று மாலை காற்றுடன் கூடிய கனமழை பெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.