வவுனியா பட்டாணிச்சூரில் வீட்டில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா!

corona death28 1
corona death28 1

வவுனியா பட்டாணிச்சூர் பகுதியில் வீட்டில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த முதியவர் நேற்றையதினம் சுகவீனம் காரணமாக அவரது வீட்டில் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. அதன் முடிவுகளின் படி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 61 வயதான முதியவரே மரணமடைந்துள்ளார். அவர்  வவுனியா வைத்தியசாலை சிற்றூழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரிவிக்கப்படுகின்றது.