தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 639 பேர் கைது

curfew check 1 768x384 1
curfew check 1 768x384 1

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 57,435 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் மேல் மாகாண எல்லைப் பகுதிகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில் 1,369 வாகனங்களும், 2,284 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.