போலி ஆவணங்கள் தயாரித்த மூவர் கைது

kaithu
kaithu

பொரளை பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்தல் மற்றும் அதற்கு ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையின்போது போலி ஆவணங்களை தயாரிக்க சந்தேக நபர்கள் பயன்படுத்திய கணினி, போலி இறப்பர் முத்திரைகள் மற்றும் போலி ஆவணங்கள் பலவற்றையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலதிக விசாரணைகளை பொரளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.