வேதன பிரச்சினை தொடர்பாக கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்

ஜோசப் ஸ்டாலின்
ஜோசப் ஸ்டாலின்

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க ஒன்றியம், கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய, இன்று அல்லது நாளை கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்