நடமாடும் தடுப்பூசி திட்டத்தின் நான்காவது நாளாக வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் தொடர்ச்சியாக இன்றையதினம் வவுனியா மகாறம்பைக்குளத்தில் வசிக்கும் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு அஸ்ராசெனிக்கா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
வவுனியா மகாறம்பைக்குளத்தில் உள்ள மதுரைவீரன் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், இராணுவத்தினர், வயோதிபர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை வவுனியா மாவட்டத்தில் இன்றையதினம் 06 மாத சிசு மற்றும் பெண்மணி உட்பட இவ்வருடம் 51 மரணங்கள் இடம்பெற்றதுடன், 3759 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.