மந்திகை மருத்துவமனையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா!

download 3 13
download 3 13

மந்திகை ஆதார மருத்துவமனையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட வயோதிபப் பெண்ணுக்கு கொவிட்-19 தொற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி கம்பர்மலையைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் இன்று பிற்பகல் சடலமாக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரியில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொவிட்-19 தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அதனால் சுகாதார நடைமுறைகளின் கீழ் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் யாழ் மாவட்டத்தில் இன்று வரை 221 பேர் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.