அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க ஒன்றியம் கல்வியமைச்சருடன் நேற்று சந்திப்பு

ஜோசப் ஸ்டாலின்
ஜோசப் ஸ்டாலின்

இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு அவசியமான யோசனையை கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தனவுக்கு தெளிவுபடுத்தியதாக ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் அதிபர் தொழிற்சங்களுக்கும், கல்வி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்போது குறித்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.