மட்டக்களப்பில் ஒரே நாளில் கொரோனாவால் 8 பேர் பலி

2021 07 02T133425Z 1447197879 RC2DCO9JDU7N RTRMADP 3 HEALTH CORONAVIRUS RUSSIA
2021 07 02T133425Z 1447197879 RC2DCO9JDU7N RTRMADP 3 HEALTH CORONAVIRUS RUSSIA

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவினால் 8 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து, 201 ஆக உயிரிழப்பு அதிகரித்துள்ளது என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

ஆரையம்பதி, கோறளைப்பற்று மத்தி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 2 உட்பட 4 பேரும், களுவாஞ்சிக்குடி, காத்தான்குடி, வவுணதீவு, மட்டக்களப்பு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்

எனவே இந்த கொரோனா தொற்றை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மக்களாகி நீங்கள் சமூகபெறுப்புடன் நடந்தால் மாத்திரம் இதனை கட்டுப்படுத்தமுடியம் என் அவர் தெரிவித்தார்.