சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 களஞ்சியசாலைகள் முத்திரையிடப்பட்டன!

sugar
sugar

சட்டவிரோதமாக சீனி, பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 4 களஞ்சியசாலைகள் இன்று முத்திரையிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த களஞ்சியசாலைகளில் இருந்து 5400 மெற்றிக் டன் சீனி பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.