முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் அல்ல எனவும் நீதித்துறையின் உத்தரவுக்கமையவே அவர் கைது செய்யப்பட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
எவரையும் அரசியல் ரீதியில் பழிவாங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் மக்களின் ஆணையின் பிரகாரமே மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளோம்.
மக்கள் ஆணைக்கு மதிப்பளித்துச் செயற்படுவதே எமது நோக்கம் குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதித்துறையின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் தெரிவித்தார்.
சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவினை பிரதமராக்கியதற்கு பொது மக்களிடம் மன்னிப்பு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.