யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி அகலிப்பதற்கான பணிகள் ஆரம்பம்!

IMG 20210831 WA0005
IMG 20210831 WA0005

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி நடுவில் இருந்து இரு பக்கமும் எட்டு மீற்றர் வரை அகலிப்பதற்கான பணிகள் விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இன்றையதினம் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் தலைமையில் நேரடியாக  ஆராயப்பட்டதுடன் உடைத்தகற்றப்பட வேண்டிய வர்த்தக நிலையங்களின் பகுதிகள் தொடர்பில் நேரடியாக பார்வையிடப்பட்டது.

குறித்த வீதி அகலிப்புக்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக கடை உரிமையாளர்களால் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டான்லி வீதியானது வீதி நடுவில் இருந்து இரு பக்கமும் 8மீற்றர் அகலிக்கப்பட உள்ளதுடன், இவ்வீதியில் வாகன தரிப்பிடம், வாய்க்காலுடன் கூடிய நடைபாதை, பெற்றோல் நிரப்பு நிலைய சந்தியில் சுற்றுவட்டம் என்பன அமைக்கப்படவுள்ளது. குறித்த வீதிப் புனரமைப்பு பணிகளை விரைவாக ஆரம்பித்து முடிக்கப்படவுள்ளது.

குறித்த வீதி புனரமைப்பு பணிகளால் ஏற்படும் அசௌகரியங்களை பொறுத்துக்கொள்ளுமாறும் இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறும் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் மாநகர முதல்வர் கேட்டுக்கொண்டார்.

நேரடி களவிஜயத்தின் போது மாநகர முதல்வருடன் மாநகர பிரதி ஆணையாளர்,மாநகர பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர், மின்சாரசபையினர், தொலைத்தொடர்பு நிறுவன பொறியியலாளர் மற்றும் குறித்த வீதி அகலிப்பு பணியில் ஈடுபட உள்ள ஒப்பந்தகார நிறுவனத்தினர், யாழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஆகியோர் பங்குபற்றினர் .