அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2,000 ரூபா நிவாரண கொடுப்பனவு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
ஹட்டனில் நேற்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பாலான மலையக தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ள போதிலும், அவர்களுக்கான நிவாரண கொடுப்பனவு இன்னும் வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.