ஜெனிவா கூட்டத்தொடருக்காக அனைத்து தமிழ்க் கட்சிகளும் இணைந்து ஒற்றுமையாக ஒரு அறிக்கையை முன்வைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இணையவழி கலந்துரையாடல் மூலம் இதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.