ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று இடம்பெறவுள்ளது.
இம்முறை நாட்டில் கொவிட் தொற்றுநோய் பரவும் சூழ்நிலையால், சூம் தொழில்நுட்பம் மூலம் ஆண்டு நிறைவு விழாவை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழா இம்மாதம் 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு பிட்ட கோட்டேயில் உள்ள சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதற்கு தலைமை தாங்குகிறார்.