அனைத்துவகை விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!

Visa
Visa

இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, அனைத்துவகை விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, விசாக்களின் செல்லுபடியாகும் காலம் எதிர்வரும் செப்டெம்பர் 7 ஆம்திகதி முதல் ஒக்டோபர் 7 ஆம்திகதி வரை 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. விசாக்களை புதுப்பிக்கும்போது, எவ்வித மேலதிக கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என்றும், விசாவுக்கான கட்டணம் மாத்திரமே அறவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.