நேற்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

sri lanka covid vaccine AP 533x355 1
sri lanka covid vaccine AP 533x355 1

நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் 180,062 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் 25,147 பேருக்கு சைனோபாம் தடுப்பூசி முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 117,038 பேர் இரண்டாவது தடவையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இதற்கிடையில் 2,774 பேர் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை முதலாவது தடவையாக பெற்றுக் கொண்டுள்ளதோடு 651 பேர் இரண்டாவது தடவையாக பெற்றுள்ளனர்.

இதேவேளை, மொடர்னா தடுப்பூசி 171 பேருக்கு முதலாவது தடவையாக செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் 6,628 பேர் மொடர்னா தடுப்பூசியை இரண்டாவது தடவையாக பெற்றுக்  கொண்டுள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது.