புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பம்

5 6d 1
5 6d 1

ஜனாதிபதி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

இது எட்டாவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடராகும் இதனை ஆரம்பிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எட்டாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வு வர்த்தமானி அறிவித்தல் மூலமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதற்கமைய, புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டது.