கெட்டம்பே மேம்பால கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பணிப்புரை

johnston fernando
johnston fernando

கண்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கெட்டம்பே மேம்பாலத்தின் கட்டுமானத்தை துரிதப்படுத்துமாறு நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்புரை விடுத்துள்ளார்.

கெட்டம்பேயில் மேம்பாலம் அமைக்கப்படுவதனால் பேராதனை – கண்டி வீதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 18 வீதிகள் அடையாளம் காணப்பட்டு அகலப்படுத்தப்பட்டு கண்டியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுவதாக நெஞ்சாலைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலைத் குறைக்கும் நடவடிக்கையாக நெரிசலான பகுதிகளில் மேம்பாலம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.