புதுக்குடியிருப்பில் மேலும் இருவர் கொரோனா தொற்றால் மரணம்!

202003241332270205 Tamil News Coronavirus Indias death toll reaches 10 SECVPF
202003241332270205 Tamil News Coronavirus Indias death toll reaches 10 SECVPF

முல்லைத்தீவில் – புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் இன்றையதினம் இரண்டு பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களில் ஒருவர் சுகவீனம் காரணமாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரிற்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (06) மரணமடைந்தார்.

மற்றைய ஒருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவரது வீட்டில் மரணமடைந்திருந்தார்.
அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்களை எரியூட்டுவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் வெள்ளப்பள்ளம் மற்றும் ஆற்றுப்புலவு பகுதியை சேர்ந்த 32, 69 வயதுடைய இருவரே மரணமடைந்துள்ளனர்.

குறித்த இரண்டு மரணங்களுடன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதியில் 11 மரணங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.