வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் கைது!

kaithu
kaithu

கேகாலை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கேகாலை நகரில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்றுடனும், 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி ரவைகள் ஒன்பதுடன் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று காவற்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ள காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.