1000 கிலோவுக்கும் அதிகமான உலர் மஞ்சளுடன் ஐவர் கைது

download 3 6
download 3 6

நாட்டுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1000 கிலோவுக்கும் அதிகமான உலர் மஞ்சள் மற்றும் மின்சாதன உபகரணங்களுடன் சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி – துடாவ கடற்கரை மற்றும் மன்னார் – அரிப்பு கடற்கரையில் நடத்தப்பட்ட சோதனைகளின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு கற்பிட்டி துடாவ கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த படகொன்றை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர். இதன்போது 1,134 கிலோ உலர்ந்த மஞ்சள் மற்றும் பல மின் சாதனங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று மன்னார் – அரிப்பு கடற்கரையில் இன்று(11) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 494 கிலோ உலர்ந்த மஞ்சளைளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கற்பிட்டி மற்றும் பேசாலை பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 45 வயதுக்குட்பட்டவர்கள் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.