மட்டு ஆரையம்பதியில் வாவியில் மீன்பிடிக்க சென்றவர் சடலமாக மீட்பு!

images 4
images 4

மட்டு காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள ஆரையம்பதி பகுதி வாவியில் தோணியில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் தோணியில் இருந்து தவறி வாவியில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று சனிக்கிழமை (11) காலையில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஆரையம்பதி 3 பிரிவு திருநீற்றுக்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நவரெத்தினம் துசாந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வழமைபோல மீன்பிடிக்க சம்பவதினமான இன்று காலையில் சென்றவர் தோணியில் இருந்து தவறி வாவியில் வீழ்ந்து நீரிழ் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.