நேற்றைய தினம் 2,802 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

corona 2
corona 2

நாட்டில் நேற்றைய தினம் 2,802 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

அவர்களில் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 6 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 483,280 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 1,605 பேர் நேற்று குணமடைந்தனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் தடுப்பு பிரிவு விடுத்துள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 411,233 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்று உறுதியான 60,895 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.