மக்களை ஒடுக்கினால் நீதிமன்றம் செல்வோம் என அரசுக்கு ரணில் எச்சரிக்கை!

Ranil 1
Ranil 1

“அரசால் அவசரகாலச் சட்டத்தின் கீழ் மக்களை ஒடுக்குவதற்கான ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடனான நேற்றைய கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அவசரகாலச் சட்டத்தின் கீழ் அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால், அதன்மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும்.

தற்போது அரிசியைத் தவிர மற்றைய அனைத்துப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அவ்வாறாகப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வியாபாரிகளிடம் தற்போது பணம் இல்லை” என்றார்.