இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்கவிடம் சற்றுமுன்னர் கையளித்துள்ளார்.
அதேவேளை, அவரது பதவி விலகலின் பின்னர் ஏற்படும் நாடாளுமன்ற வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.