மெதகந்த பிரதேசத்தில் வாளால் வெட்டி ஒருவர் படுகொலை!

sword
sword

பலாங்கொடை, வெலேகும்புர – மெதகந்த பிரதேசத்தில் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தலைமையகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெதகந்தவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சியம்பலாகஹ பிரதேசத்திலுள்ள லயன் குடியிருப்பின் மதில் தொடர்பில் இரு தரப்பினருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் வாளால் குறித்த நபரை வெட்டியுள்ளார்.

இதன்போது படுகாயமடைந்த நபர் பலாங்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் காவல்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.