நாடாளுமன்ற உறுப்பினராகிறார் ஜயந்த கெடகொட!

Jayantha Ketagoda
Jayantha Ketagoda

அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்டுள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவின் பெயர் அடங்கிய ஆவணம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குறித்த பெயர் அடங்கிய ஆவணம் இன்று பிற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராய்ந்ததன் பின்னர், ஜயந்த கெட்டகொடவை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.