நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாத மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்லவோ அல்லது பொது இடங்களில் நடமாடவோ தடை விதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
மன்னாரில் நேற்று நடைபெற்ற கொவிட் தடுப்புக் குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட வாழ் மக்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமையே இந்த தீர்மானத்திற்கான காரணமென மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.