மாந்தை மேற்கில் மண் ஏற்றிச் சென்றவர்கள் கைது!

3
3

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (17) இரவு சட்ட விரோதமான முறையிலும், அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் மற்றும் 5 உழவு இயந்திரங்கள் இலுப்பை கடவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதோடு 8 சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.
இலுப்பைக்கடவை காவல் பிரிவில் உள்ள முதலியார் கமம் பகுதியில்  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை (17) இரவு  சட்ட விரோதமான முறையிலும் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறியும் மண் ஏற்றிச் சென்ற 3 டிப்பர் மற்றும் 5 உழவு இயந்திரங்கள் காவல்துறையினர் மணலுடன்  கைப்பற்றியுள்ளதோடு, டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்களின் சாரதிகளையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 சாரதிகளும் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 22 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட மணல் மற்றும் வாகனங்கள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதோடு அன்றைய தினம் குறித்த 8 சாரதிகளும் மன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.