இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் அளவு சுமார் 150 கிலோவுக்கும் அதிகமாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் 9 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் இன்று(18) காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.