மன்னாரில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழன் – பொலிஸார் விசாரணை !!

55
55

மதவாச்சி பிரதான வீதி, உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினால் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது . உயிரிழந்தவர் உயிலங்குளம் வட்டிப்பித்தான் மடு கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான 41 வயதுடைய மாரி தர்மராசா என தெரியவந்துள்ளது.

அவர் தங்கியிருந்த வீட்டிற்கு முன்பாக உள்ள வீதியில் இனந்தெரியாக நபர்களினால் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சுட்டுக் கொலை செய்யப்பர்டார் .

சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டனர்.

பின்னர் விசேட தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இன்று காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்ட பதில் நீதிவான் இ.கயஸ் பெல்டானோ சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதோடு, சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.