வெலிகடை சிறைச்சாலையில் இருந்து பொதி ஒன்று மீட்பு!

unnamed 8
unnamed 8

வெலிகடை சிறைச்சாலையின் மதில் சுவரில் இருந்து சிறைச்சாலைக்குள் வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொதி ஒன்று சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

இந்த பொதியில் இருந்து தொலைபேசி, இரண்டு சிம்அட்டைகள் மற்றும் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மீட்கப்பட்ட பொதி மேலதிக விசாரணைகளுக்காக பொரளை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.