சர்வதேச கடல் பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் 170 கிலோ என அளவீடு!

images 1 4
images 1 4

இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பரப்பில் படகொன்றில் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருள் 170 கிலோ 866 கிராம் நிறையுடையவை என அளவிடப்பட்டுள்ளது.

கடற்படை ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த போதைப்பொருள் தொகை 1,575 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகு அதில் பயணித்த 9 சந்தேக நபர்களுடன் இன்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அத்துடன் அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் பிரஜைகள் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தில் குறித்த போதைப் பொருள் தொகை துல்லியமாக அளவிடப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.