அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்க தீர்மானம்

download 1 19
download 1 19

அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை கனியவள கூட்டுதாபனத்தின் கீழ் புதிய நிறுவனத்தை உருவாக்கி, அதன் சந்தை பெயரில் எரிவாயுவை விநியோகிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டது.

சக்திவலு அமைச்சின் கீழ் இயங்கும் களியவள கூட்டுதாபனத்தின் ஊடாக இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த அமைச்சு அறிவித்துள்ளது.

இந்தவிடயம் குறித்து கருத்துரைத்த கனியவள கூட்டுதாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர், குறித்த எரிவாயு நிறுவனத்தின் சாத்தியகூறுகள் குறித்து ஆராயப்படுவதாக தெரிவித்தார்.