இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பரப்பில் படகொன்றில் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 9 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல் பரப்பில் படகொன்றில் 170 கிலோ 866 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த போதைப்பொருள் தொகை 1,575 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களும் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என கடற்படை அறிவித்திருந்தது.