மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட முடியுமாயின் வர்த்தக நிலையங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய சுய தொழிலாளர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு – கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்னாள் அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டகாரர்கள் தனிமைப்படுத்தல் விதிகளை கடைப்பிடித்து, முகக்கவசங்களை அணிந்திருந்ததுடன், சமூக இடைவெளியையும் பேணியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், கோட்டை காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தை நிறுத்துமாறு தெரிவித்ததையடுத்து சற்று குழப்ப நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.