ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் கைதுதாவது கட்சியின் பிரச்சனைகளை தீர்க்கும் கலந்துரையாடல்களை எவ்விதத்திலும் பாதிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்
கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஐக்கிய தேசிய கட்சியில் காணப்படும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடுத்த வருடத்தின் முதல் வாரத்தில் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும்.
கட் சியின் தலைமைப்பதவி தொடர்பில் தற்போது நடைபெறும் பேச்சுக்கள் சாதகமாக சென்று கொண்டிருக்கின்றன. இறுதி முடிவு புதிய ஆண்டில் எடுக்கப்படும் – என்றார்.