14ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 30 ஆவது போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர்கிங்ஸ் ஆகிய அணிகள் இன்றைய போட்டியில் மோதிவருகின்றன.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடி வரும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.
அணிசார்பில் அதிகபடியாக ருதுராஜ் கெய்க்வாட் 9 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடங்கலாக 88 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதற்கமைய மும்பை இந்தியன்ஸ் அணி 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட உள்ளது.