திம்புள்ள பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொட்டகலை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவரும், முச்சக்கரவண்டி சாரதியும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.