அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Dambulla market
Dambulla market

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் சில பொருட்களுக்கு நிர்ணய விலையினை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்ட பின்னர், அதனை மீறுகின்ற வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்படி, தனிநபர் வர்த்தகம் மற்றும் நிறுவனங்களுக்காக அறவிடப்படும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தனிநபர் வியாபாரங்களுக்காக விதிக்கப்பட்ட 1,000 ரூபா அபராதம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு இலட்சம் ரூபா அபராதம் ஐந்து லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இரண்டாவது தடவையாகவும் அதிகூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் பட்சத்தில் 2,000 ரூபா தண்டப்பணத்திற்காக 20,000 ரூபாவும், 2 இலட்சம் ரூபாவிற்கு 10 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்படவுள்ளது.